தமிழாய்வுத்துறை

 நாளும் முத்தமிழால் தமிழ் பரப்பும் தமிழாய்வுத்துறையில் 08.02.2018 முத்தமிழ்மன்ற தொடக்கவிழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற புலவர் மா.சின்னு ஐயா அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. முத்தமிழ் மன்ற செயலர் டி.பிரியங்கா (முதலரமாண்டு தமிழ் இலக்கியம்) வரவேற்புரை வழங்கிட சிறப்பு விருந்தினராக முனைவர் பேராசிரியர் சி.ஷகிலாபானு தூயவளனார் கல்லூரி திருச்சி அவர்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விருந்தினை வழங்கினார். விழாவின் முடிவில் சு.சூரியா (முத்தமிழ் மன்ற இணைச்செயலர்) நன்றியுரையாற்றினார்.

தமிழ்ப் பேரவை தொடக்கவிழாவும் 03.03.2018 அன்று நடைபெற்றது. வே.ஹேமலதா (இரண்டாமாண்டு முதுகலைத்தமிழ் இலக்கியம்) தமிழ்ச்செயலர் விழாவிற்கு வரவேற்புரை வழங்க சிறப்பு விருந்தினராக முனைவர் பேராசிரியர் பெ.சூரியநாராயணன் அரசு கலைக்கல்லூரி கோவை அவர்கள் கலந்த கொண்டு மாணவர்களுக்கு தமிழின் சிறப்பினை எடுத்துரைத்தார்கள். விழாவின் இறுதியில் எம்.மகேஷ்வரன் (தமிழ்ப் பேரவை இணைச்செயலாளர்) நன்றியுரையாற்றினார்.

இவ்விரு விழாவிற்கும் கல்லூரி முதல்வர் முனைவர் பேராசிரியர் ந.தங்கராஜ் அவர்கள் தலைமையுரையாற்றினார். கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் தலைவரும் கல்லூரியின் செயலருமான மருத்துவருமான சு.சோமசுந்தரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கந்தசாமிக்கண்டர் அறநிலையத்தின் உபத்தலைவர் மருத்துவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு முன்னிலை வகுத்தார்.

Tamil Association
Tamil Association
Tamil Association
Tamil Association
Tamil Association